பதிவு செய்த நாள்
03
அக்
2017
11:10
காஞ்சிபுரம்: அரசு தொடர் விடுமுறையால், காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களில், பக்தர்கள் கூட்டம் நிரம்பிவழிந்தது. பழமையான கோவில்கள் நிறைந்த சுற்றுலாஸ்தலமாக காஞ்சிபுரம் விளங்குகிறது. இதனால், அரசு விடுமுறை நாட்களில், சுற்றுலா பயணியர் வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், பள்ளி காலாண்டு விடுமுறை, தசரா விடுமுறை என, தொடர் அரசு விடுமுறையை தொடர்ந்து, நே ற்று காஞ்சிகோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். காஞ்சி காமாட்சியம்மன், ஏகாம்பரநாதர், வரதராஜப்பெருமாள், கைலாசநாதர், குமரகோட்டம் என, பல கோவில்களில், பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக, காமாட்சியம்மன் கோவிலில், பக்தர்கள் வரிசையில் நின்று, தரிசனத்திற்கு செல்லும் இடம் நிரம்பி, கோவிலில் பின்புறம் வரை, நீண்ட வரிசையில் காத்திருந்தனர். உள்ளூர் மற்றும் தமிழக பக்தர்கள் மட்டுமின்றி, பிறமா நிலபக்தர்களும் அதிகமாக காணப்பட்டனர்.