மேலுார்: மேலுார் அருகே சூரக்குண்டு கிராமத்தில் உள்ள சின்னடைக்கி, பெரியடைக்கி மற்றும் ஆண்டி அரசன் மகன் கோயில் புரட்டாசி திருவிழா நடந்தது. மந்தையில் பொதுமக்கள் ஒன்றுகூடினர். கிராமத்து பெரியவர்கள் முன்னே நடந்து செல்ல பெண்கள் பித்தளை பானையில் பொங்கல் வைப்பதற்கான பூஜை பொருட்களுடன் 2 கி.மீ., துாரத்தில் உள்ள கோயிலுக்கு சென்றனர். அங்கு கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபட்டனர்.