புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை: கோயில்களில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07அக் 2017 11:10
புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
புரட்டாசி பெருமாளுக்கு உகந்த மாதம். அதனால் புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடைபெறுகிறது. புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, திருப்பூர், கோவில் வழி வரதராஜப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பூர், செட்டிபாளையம் அரங்கநாத பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் கருடாழ்வார் வாகனத்தில் எழுந்தருளி, பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். செஞ்சி பீரங்கிமேடு வெங்கடேச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கோயில்களில் பக்தர்கள் வருகைக்காக கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.