பதிவு செய்த நாள்
09
அக்
2017
11:10
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ராகவேந்திரர் கோவிலில், ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ராகவேந்திரர் கோவிலில், ஆதிசேஷ நாகராஜ சேவா சமிதி சார்பில், நேற்று ஸ்ரீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, கணபதி பூஜை புண்ணியவாஜனம், சுவாமிக்கு மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு, மகா கணபதி பூஜை கலச ஸ்தாபனம், கங்கணம் கட்டுதல், ஹரிவாயு ஸ்துதி பாராயணமும், நவக்கிரஹ ஹோமம், லட்சுமி ஹோமம், மன்யசுக்த ஹோமம் ஆகியவை நடந்தன. காலை, 10:00 மணிக்கு, ஸ்ரீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாணம் முடிந்து, ஸ்ரீனிவாச பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, வீர ஆஞ்சநேய பஜனை மண்டலியும், சிறுவர்கள் பங்கேற்ற கோலாட்ட நிகழ்ச்சியும் நடந்தன.