பதிவு செய்த நாள்
09
அக்
2017
12:10
காஞ்சிபுரம் : பன்னிரு திருமுறைகள் முற்றோதல் நிகழ்ச்சி, காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிவில் நடந்தது. காஞ்சிபுரம் திருக்கயிலாயப் பரம்பரைத் திருவாடு துறை ஆதீனம் சைவத்திருமுறை நேர்முகப் பயிற்சி மையம் சார்பில், தமிழகத்தில் உள்ள, பல்வேறு சிவாலயங்களில் பன்னிரு திருமுறைகள் முற்றோதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 347வது முற்றோதல் நிகழ்ச்சி, காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலில் நடந்தது. இதில், திருவிசைப்பா மற்றும் திருமந்திரத்தில், ஒன்பது மற்றும் 10ம் திருமுறை முதல், தந்திரம், 336 பாடல் வரை, முற்றோதல் நடந்தது. இதில், ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்றனர்.