மனிதனுக்கு எதையெடுத்தாலும் குழப்பமாகவே இருக்கிறது. தெளிந்த புத்தி அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. இந்த குழப்பத்தைப் போக்கி மனிதனைக் காக்க ஆதிசங்கரர் எழுதிய பாடலே மோக முத்கரம். மோகமுத்கரம் என்றால் ஆசையை உடைக்கும் சம்மட்டி என்று பொருள். இதை பஜகோவிந்தம் என்றும் சொல்வர். இதனைப் படித்தால் பிறவிக்கடலை, சிறிய ஓடையைத் தாண்டுவது போல எளிதாக தாண்டி விடலாம். இதன் முதல் வரி பஜகோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜகோவிந்தம் மூடமதே என்று துவங்கும். பஜ கோவிந்தம் என்பதை மூன்று முறை கூறுகிறார் சங்கரர். ஏதேனும் ஒன்று உறுதியாக நடக்கும் என்றால் தான், அருளாளர்கள் அதை 3 முறை சொல்வார்கள். கோவிந்தனைச் சரண டைவது ஒன்றே நமக்கு நற்கதியைத் தரும் என்பது இந்த வரியின் பொருள்.