மதுரையில் சிவன் நிகழ்த்திய திருவிளையாடல் களில், இறையனார் என்னும் புலவராக வந்து, தருமிக்காக பாடல் எழுதியதும் ஒன்று. கொங்குதேர் வாழ்க்கை எனத் துவங்கும் இந்தப் பாடலைக் கேட்ட மன்னன் செண்பக பாண்டியன், தருமிக்கு பரிசு கொடுக்க முடிவெடுத்தான். ஆனால், பாடலின் பொருளில் குற்றம் இருப்பதாக தலைமைப் புலவர் நக்கீரர் தடுத்தார். இதைத் தட்டிக் கேட்ட சிவனின் வாதத்தையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. கோபம் கொண்ட சிவன், அவருக்கு தொழுநோய் உண்டாகும்படி சபித்தார். பின், காளஹஸ்தி சிவனருளால் தொழுநோய் தீரப் பெற்றார். அங்கேயே தங்கி முக்தியும் பெற்றார். காளஹஸ்தியில் சித்துலய்யா என்னும் பெயரில் நக்கீரருக்கு கோயில் இருக்கிறது.