மதுரையில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ள திருவாதவூர், மாணிக்கவாசகர் பிறந்த சிறப்புடையது. இவ்வூர் ஏரிக்கரையில் முழிச்சிப் பி ள்ளையார் கோயில் உள்ளது. இந்தப் பிள்ளையாரை பார்வைக் குறை உள்ளவர்கள் வழிபடுகிறார்கள். மாணிக்கவாசகரின் தாய்தந்தையருக்கு வயது முதிர்ச்சியால் ஏற்பட்ட கண் பார்வைக்குறைவு இந்த பிள்ளையாரை வழிபட்டதால் நீங்கியது என்று திருவாதவூர் தலபுராணம் குறிப்பிடுகிறது.