பதிவு செய்த நாள்
11
அக்
2017
11:10
திருத்தணி : மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் நேற்று, புரட்டாசி மாத செவ்வாய் கிழமையை ஒட்டி, மூலவருக்கு, 108 லிட்டர் பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. திருத்தணி முருகன் கோவிலின், உபகோவிலான மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், புரட்டாசி மாத செவ்வாய்கிழமையை ஒட்டி நேற்று, மூலவர் அம்மனுக்கு காலையில், 108 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. பின், மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை, 3:00 மணி முதல் மாலை, 4:30 வரை ராகுகால பூஜையும் நடந்தது. கோவில் வளாகத்தில் திரளான பெண்கள் பொங்கலிட்டு, அம்மனுக்கு படைத்தனர்.திருத்தணி, மத்துார், புச்சிரெட்டிப் பள்ளி, பொன்பாடி உட்பட, பல கிராமங்களில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். இதே போல், திருத்தணி சுற்று வட்டார அம்மன் கோவில்களில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.