ராசிபுரம்: கல்லாங்குளம், அண்ணாமலையார் திருக்கோவில் குளம், 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது. வெண்ணந்தூர் ஒன்றியம், கல்லாங்குளத்தில் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. மழையின்மையால், 15 ஆண்டுகளாக வறண்டிருந்த குளம், தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நிரம்பி வருகிறது. இதை கண்டு பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குளத்தில் மூழ்கி, சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், அருகே உள்ள கிணறுகள் அனைத்தும் ஊற்றெடுத்துள்ளன. விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.