மதுரை: கள்ளந்திரி அருகே பொய்கைகரைப் பட்டியில் மந்தையம்மன் கோயில் முளைப்பாரி விழா நடந்தது. முதல்நாள் விழாவில் பூக்களால் அலங்கரித்த சப்பரத்தில் மந்தை அம்மன் வீதி உலா நடந்தது. அக்னிசட்டி, மாவிளக்கு எடுக்கப்பட்டது. இரண்டாம் நாள் விழாவில் உருண்டு கொடுத்தல், கிடா வெட்டுதல், முளைப்பாரி மற்றும் நாடகம் நடந்தது. ஏற்பாடுகளை பொய்கை கரைப்பட்டி கிராமத்தினர் செய்திருந்தனர்.