பதிவு செய்த நாள்
13
அக்
2017
11:10
தஞ்சாவூர்: திருவண்ணாமலையில் கடந்த மாதம் பிடிபட்ட, ஆறு ஐம்பொன் சிலைகளை, கும்பகோணம் நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்தனர். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், எமலிங்கம் கோவில் அருகே, பல கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகளை, செப்., 21ல், ஏழு பேர் கும்பல் விற்க முயன்றபோது, சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரிடம் பிடிபட்டது. அப்போது அவர்களிடமிருந்து, ஆறு ஐம்பொன் சிலைகளும், இரண்டு கார்கள், இரண்டு இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட, ஏழு பேரும் திருவண்ணா மலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை, திருவண்ணாமலை நகர போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருந்தனர். இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட, ஆறு ஐம்பொன் சிலைகள், கார்கள், இரு சக்கர வாகனங்களை, திருவண்ணாமலை நகர போலீசார் நேற்று கும்பகோணம் கொண்டு வந்தனர். அங்கு, கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.வழக்கு முடியும் வரை சிலைகளை, கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் பத்திரமாக வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அங்கு கொண்டு செல்லப்பட்டன.