கொடுமுடி: சின்னப்பையன் புதூர், பெருமாள் கோவிலில், நாளை பெருவிழா நடக்கிறது. கொடுமுடி, சின்னப்பையன் புதூரில் உள்ள, கொளத்துப்பாளையம் புதூர் மாமரத்து பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழமையை ஒட்டி, பெருவிழா நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி அன்று காலை, காவிரியில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்படுகிறது. தொடர்ந்து, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்கார பூஜை நடக்கிறது. நிகழ்ச்சி நிறைவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது.