திருமலை கருட பாறைக்கு பாலாபிஷேகம்: பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2017 04:10
திருப்பதி: திருப்பதி திருமலை சென்று விட்டு மலைப்பாதை வழியாக வாகனங்களில் கீழே வருபவர்கள் மறக்காமல் ஒரு இடத்தை நோக்கி அதிசயத்துடன் பார்த்து கும்பிட்டுவிட்டு வருவர். அந்த இடத்தில் அப்படி என்ன அதிசயம் இருக்கிறது என்ற கேள்வி எழலாம். திருப்பதி வெங்கடாசலபதிக்கு பிடித்தமான கருடாழ்வார் போலவே அந்த மலை விளிம்பு அமைந்துள்ளது தான் அந்த அதிசயம்.
இயற்கையாக அமைந்த மலையின் ஒரு பகுதி இப்படி கருடாழ்வார் போல இருப்பதைக் கண்டு தூரத்தில் இருந்தே பார்த்து வியந்த பக்தர்கள் சிலர் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையன்று மிகவும் சிரமம் எடுத்துக் கொண்டு அந்த முலைமுகட்டிற்கே சென்றனர். இடுப்பில் கயிறைக்கட்டி பக்தர்கள் சிலரை மலைமுகட்டில் இறக்கிவிட்டனர் அவர்கள் கருட வடிவிலான பாறையை சுத்தம் செய்து குடம் குடமாய் பால் ஊற்றி அபஷேகம் செய்தனர்,பின் இருபத்துநான்கு அடி உயர மாலையை அணிவித்து தீபராதனை காட்டினர். வழக்கமாக வெறும் பாறையாக பார்த்த மக்கள் இப்போது மலர் மாலையுடன் கருட வடிவிலான பாறை பவித்திரமாக ஜொலித்ததை பார்த்து ஆனந்தத்துடன் கைகூப்பி வணங்கினர். நாளை(அக்.14) நான்காம் சனிக்கிழமை பெருமாளின் பக்தர்கள் என்ன செய்யக்காத்திருக்கிறார்களோ...