ஸ்ரீவில்லிபுத்துார், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாளுக்கு திருமலை திருப்பதி பெருமாள் பரிவட்டம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. திருப்பதி புரட்டாசி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் திருநாள் கருடசேவையின்போது, செப்.25 அன்று ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து கொண்டுசெல்லபட்ட ஆண்டாள் சூடிய மாலை செப், 27ல் பெருமாளுக்கு அணிவிக்கபட்டது. பின்னர் அன்று பெருமாள் சூடிகளைந்த பரிவட்டம் ஆண்டாளுக்கு சாற்றுவதற்காக ஸ்ரீவில்லிபுத்துார் கொண்டுவரப்பட்டது. நேற்று ஸ்தானிகம் கிருஷ்ணன் வீட்டில் பரிவட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் நேற்று இரவு 7:30 மணிக்கு ஸ்தானிகம் கிருஷ்ணன் வீட்டிலிருந்து கோயில் மரியாதையுடன் பரிவட்டம் எடுத்து வரபட்டு, ஆண்டாளுக்கு சாற்றி, சிறப்பு பூஜைகள் நடந்தது. தக்கார் ரவிச்சந்திரன், செயல்அலுவலர் ராமராஜா, வேதபிரான் பட்டர் அனந்தராமன், சுதர்சன். ஸ்தானிகம் ரமேஷ் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.