பதிவு செய்த நாள்
16
அக்
2017
12:10
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் புரட்டாசி உற்சவத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு கடந்த நான்கு வாரங்களாக சிறப்பு பூஜைகள் நடந்தன. இதன் நிறைவாக நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை 9 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்காரமும் செய்தனர். காலை 11 மணிக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கு திருமஞ்சனமும், அலங்காரமும் செய்தனர். தொடர்ந்து திருக்கல்யாணமும், சாமி கோவில் உலாவும், திருத்தாலாட்டும் நடந்தது. பக்தர்களுக்கு தொடர் அன்னதானமும், தாம்பூலமும் வழங்கினர். நிகழ்ச்சியையொட்டி, பள்ளி, கல்லுாரி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், பாகவதர்களின் கச்சேரியும், கோலாட்டம், கும்மியாட்டம் ஆகியன நடந்தது. இதில் ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவன தாளாளர் வழக்கறிஞர் ரங்க பூபதி, செயலாளர் ஸ்ரீபதி, கமக்கன்னியம்மன் கோவில் அறங்காவலர் அரங்க ஏழுமலை, அ.தி.மு.க., நகர செயலாளர் பிரித்விராஜ், வழக்கறிஞர் வைகை தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.