பதிவு செய்த நாள்
16
அக்
2017
12:10
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புறப்பகுதியில் உள்ள கோவில்களில், புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பொள்ளாச்சி குளத்துப்புதுார் பூமிநீளா சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், ஐந்தாவது சனிக்கிழமை மஹோற்சவம் நடந்தது. விழாவில் நேற்று காலை, 7:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை கோ பூஜை, மகாசுதர்சனம், தன்வந்த்ரி, மகா பூர்ணாஹுதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. பொள்ளாச்சி பாலக்காடு ரோடு லட்சுமி நரசிம்மர் கோவிலில், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடந்தது. விழாவையொட்டி, காலை,6:00 மணி முதல் மகா சுதர்சனேஹாமம், காலை, 10:00 முதல் மதியம், 12:30 மணி வரை விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நிகழ்ச்சியும் நடந்தது. பொள்ளாச்சி பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலில், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆஞ்சநேயரை தரிசனம் செ ய்தனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.
ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில் விழாவையொட்டி, கால ை, 10:30 மணி முதல், மகா கணபதி ேஹாமம், சுதர்சன ேஹாமம், லட்சுமி ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு ேஹா மங்கள், சிறப்பு அபிேஷம், அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. மூங்கில்மடை ராமர் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையையொட்டி நேற்று, சிறப்பு பூஜைகள், இரவு, 8:00 மணிக்கு அன்னதானமும் நடந்தது. பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவில், சூளேஸ்வரன்பட்டி கரிவரதராஜ பெருமாள் கோவில், டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவில், சின்னேரிபாளையம் ராமர் கோவில், நெகமம் காமாட்சியம்மன் கோவில், அன்சாரி வீதி சிவராமபக்த ஆஞ்சநேயர் சுவாமி கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன.