பதிவு செய்த நாள்
16
அக்
2017
02:10
உற்சாக மனப்பான்மை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!
சூரியன், ராகு மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பர். புதன் அக். 28- வரையும், சுக்கிரன் நவ. 3- வரையும் நன்மையளிப்பர். மாத முற்பகுதியில் பணப்புழக்கம் அதிகரிக்கும். செயலில் வெற்றி உண்டாகும். ஆடம்பர வசதி பெருகும். கடவுளின் கருணை உங்களுக்கு கிடைக்கும். முயற்சியில் இருந்த பின்னடைவு மறையும். சமூகத்தில் மதிப்பு சீராக இருக்கும். அக்.28-க்கு பிறகு வீண் விவாதத்தை தவிர்க்கவும். குடும்ப வாழ்வில் குதூகலம் உண்டாகும். திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பெற்றோரின் தேவையறிந்து அவர்களின் எதிர்பார்பபை நிறைவேற்றுவீர்கள். சகோதர வழியில் நன்மை உண்டாகும். கணவன், மனைவி இடையே அன்பு நீடித்தாலும் அக்.27-க்கு பிறகு கருத்து வேறுபாடு வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். நவ.1,2-ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் அவர்கள் வகையில் நவ. 12,13- கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. நவ.5,6ல் பெண்கள் உறுதுணையாக செயல்படுவர். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். செவ்வாய் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. பயணத்தின் போது கவனம் தேவை.
தொழில், வியாபாரத்தில் வருமானத்திற்கு குறைவிருக்காது. தொழில் விஷயமாக வெளியூர் சென்று ஆதாயத்துடன் திரும்புவீர்கள். பகைவர்களை வெற்றி கொள்ளும் திறமை உண்டாகும். எதிரிகளால் இருந்த முட்டுக்கட்டை விலகும். பொருளாதார வளம் சிறக்கும். நவ.3,4,7,8,9-ல் சந்திரனால் தடைகள் ஏற்படலாம். அக். 20,21, நவ.16ல் வருமானம் பெருகும். சனியால் தீயோர் சேர்க்கைக்கு சிலர் ஆளாகலாம். எனவே யாரிடமும் எச்சரிக்கையுடன் பழகவும்.
பணியாளர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அக். 27-க்கு பிறகு படிப்படியாக வேலைப்பளு அதிகரிக்கும்.
அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம். அக்.30,31- அனுகூலமான நாட்களாக அமையும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சக கலைஞர்கள் உதவிகரமாக இருப்பர். நவ.3க்கு பிறகு முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு போன்றவை கிடைக்காது. பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராது உழைக்க வேண்டியதிருக்கும். அக்.18,19,நவ.14,15-ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற பலனை காணலாம். கால்நடை வளர்ப்பவர்கள் கூடுதல் அக்கறை காட்ட வேண்டியதிருக்கும். புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க நேரிடும். வழக்கு, விவகாரத்தில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள் சிறப்பான நிலையில் இருப்பர். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் இனிதே கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சுய தொழில் செய்து வரும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். புதிய பதவியும் தேடி வரும். அக். 27- க்கு பிறகு கணவரிடம் விட்டுக் கொடுத்து போகவும். நவ. 10,11- ல் ஆடை, ஆபரணம் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து உதவி கிடைக்கும்.
* நல்ல நாள்: அக்.20, 21, 22, 23, 24, 30, 31, நவ.1, 2, 5, 6, 10, 11, 16
* கவன நாள்: அக். 25,26 -சந்திராஷ்டமம்.
* அதிர்ஷ்ட எண்: 7, 9
* நிறம்: நீலம், சிவப்பு
* பரிகாரம்:
● செவ்வாயன்று முருகன் கோயில் வழிபாடு
● வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு தீபம்
● சனிக்கிழமையில் ராமருக்கு துளசி அர்ச்சனை