பதிவு செய்த நாள்
16
அக்
2017
02:10
கண்ணியமாக நடக்க விரும்பும் கடக ராசி அன்பர்களே!
இந்த மாதம் முழுவதும் செவ்வாயால் நற்பலன் உண்டாகும். சுக்கிரன் நவ.3ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலன் தருவார். அதோடு புதனால் அக்.27- வரை நன்மை உண்டாகும். மற்ற கிரகங்கள் அனைத்தும் திருப்தியற்ற நிலையில் தான் உள்ளன. எந்த கிரகத்தால் எந்த பிரச்னை வந்தாலும் அதை செவ்வாய், சுக்கிரனின் அனுகூலத்தால் முறியடித்து விடுவீர்கள். தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும். முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம்.
பொருளாதார வளம் மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய வீடு, -மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும். சுக்கிரனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்-, மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அக்.27- வரை பொன், பொருள் சேரும். ஆடம்பர வசதி பெருகும். திட்டமிட்டபடி சுபநிகழ்ச்சி கைகூடும். அதன் பின் கணவன்-, மனைவி இடையே கருத்துவேறுபாடு வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். நவ. 5,6ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் அக்.20,21, நவ.16-ல் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கியிருப்பது நல்லது. நவம்பர் 10,11ல் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். உஷ்ணம், தோல் தொடர்பான நோய் வரலாம் கவனம்.
தொழில், வியாபாரத்தில் சுக்கிரனால் நல்ல பணப்புழக்கம் உண்டாகும். சூரியனால் பெண்கள் வகையில் தொல்லைகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அக். 25,26-ல் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். நவ. 7,8,9,12, 13ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம்.
அக். 27-க்கு பிறகு வீண் அலைச்சல் அதிகரிக்கும். தொழில் நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம்.பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அதிகாரிகள் அனுசரணையுடன் நடந்து கொள்வர். சக ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை அக்.27-க்குள் கேட்டு பெற்றுக் கொள்ளவும். நவ.3,4- அனுகூலமான நாட்களாக அமையும்.
கலைஞர்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.எதிர்பார்த்த புதிய பதவி கிடைக்கும்.
அக். 22,23,24ல் மனக்குழப்பம் ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் சிறப்படைவர்.
ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். அக். 27-க்கு பிறகு சிரத்தை எடுத்து படித்தால் தான் பலன் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறை இருக்காது. புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். நெல்,சோளம்,கம்பு, தினை போன்றவற்றில் சிறப்பான மகசூல் கிடைக்கும். வழக்கு, விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்க வாய்ப்புண்டு.
பெண்களுக்கு குருபகவானால் மன உளைச்சல், உறவினர் வகையில் வீண் பகை உண்டாகும். ஆனால் நவ.2- க்கு பிறகு சுக்கிரனால் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை உண்டாகும். அக்.19,20,நவ.14,15-ல் பிறந்த வீட்டில் இருந்து உதவி கிடைக்கும். அக்.27,28,29-ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள்.
* நல்ல நாள்: அக்.18, 19, 25, 26, 27, 28, 29, நவ.3, 4, 5, 6, 10, 11, 14, 15
* கவன நாள்: அக். 30, 31- சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1, 3
* நிறம்: நீலம், வெள்ளை
* பரிகாரம்:
● தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
● வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம்
● வெள்ளியன்று லட்சுமிக்கு அர்ச்சனை