பதிவு செய்த நாள்
16
அக்
2017
02:10
வசீகர பேச்சால் பிறரைக் கவரும் கன்னி ராசி அன்பர்களே!
சுக்கிரன், குரு, சனி, ராகு நன்மை தர காத்திருக்கின்றனர். மற்ற கிரகங்கள் திருப்தியற்ற நிலையில் இருப்பதால் முக்கிய முடிவுகளை, தீர சிந்தித்த பிறகே செயல்படுத்துவது நல்லது. பணப்புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது. மனதில் மகிழ்ச்சி குடியிருக்கும். பெண்கள் உறுதுணையாக செயல்படுவர்.
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பெண்களால் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். பெண்களால் முன்னேற்றமான சம்பவம் நடக்கும். அக்.18,19,நவ.14,15ல் அவர்களால் உதவி கிடைக்கும். நவ.10,11ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் அக். 25,26-ல் அவர்கள் வகையில் கருத்து வேறுபாடு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
தொழில், வியாபாரத்தில் எதிரிகளால் இடையூறு அவ்வப்போது வந்தாலும் அதனால் பாதிப்பு உண்டாகாது. பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். அக்.30,31-ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.
அக்.20,21,நவ.12,13,16ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். புதனால் உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர், வீண் மனக்கவலை முதலியன அக்.27-க்கு பிறகு மறையும். ஆனால் அதன் பின் அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு,-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். சுக்கிரனால் நவ. 2-க்கு பிறகு அரசு வகையில் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.
பணியாளர்கள் குருவால் சீரான வளர்ச்சியடைவர். தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு புதிய பதவி தேடி வரும். அதிகாரிகள் அனுசரணையுடன் நடந்து கொள்வர். கோரிக்கை ஒவ்வொன்றாக நிறைவேறும். சக ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். நவ. 7,8,9- ல் நன்மையை எதிர்பார்க்கலாம். இடமாற்ற பீதி மறையும். அரசு ஊழியர்கள் வேலைப்பளுவை சந்தித்தாலும், அதற்குரிய ஆதாயம் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு சுக்கிரன் சாதகமாக இருப்பதால் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வருமானம் படிப்படியாக அதிகரிக்கும். நவ.2க்கு பிறகு அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும்.
அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பலனை பெற முடியாது. அக்டோபர் 27,28,29ல் மனக்குழப்பம் ஏற்படலாம். மாணவர்கள் -அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். சிரத்தை எடுத்து படித்தால் வளர்ச்சி பெற முடியும். குருவால் பின்தங்கிய நிலை இருக்காது. ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். போட்டிகளில் வெற்றி காணலாம். விவசாயிகள் நெல், கேழ்வரகு, சோளம் போன்ற தானியங்கள் மூலம் சிறப்பான மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல பலன் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் இல்லை. வழக்கு, விவகாரத்தில் மெத்தனமாக இருக்க வேண்டாம்
பெண்கள் கணவர், குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். குரு சாதகமாக இருப்பதால் பிற்போக்கான நிலை ஏற்படாது. பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். பெற்றோர் வீட்டில் இருந்து உதவி கிடைக்கப் பெறலாம். அக். 22,23,24- ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும்.
புத்தாடை, அணிகலன்கள் கிடைக்கப் பெறலாம். நவ.1,2- தேதிகள் சிறப்பான நாட்கள். சகோதரிகளால் உதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். நவ.2-க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.
பித்தம், மயக்கம் போன்ற இடர்பாடு மறையும். உடல் நலன் சீராகும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.
* நல்ல நாள்: அக்.17, 19, 22, 23, 24, 30, 31 நவ.1, 2, 7, 8, 9, 10, 11, 14, 15
* கவன நாள்: நவ. 3, 4- சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4,7 நிறம்: கருப்பு , வெள்ளை
* பரிகாரம்:
● செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிேஷகம்
● புதன்கிழமையில் குலதெய்வ வழிபாடு
● வெள்ளியன்று லட்சுமிக்கு நெய் தீபம்