பதிவு செய்த நாள்
16
அக்
2017
02:10
தன்னலம் கருதாமல் உதவி செய்யும் தனுசு ராசி அன்பர்களே!
புதன் அக்டோபர் 27- வரையிலும், சுக்கிரன் நவ.2- க்கு பிறகும் நன்மை கொடுப்பர். சூரியன், குரு மாதம் முழுவதும் நற்பலன் தர காத்திருக்கின்றனர். பொருளாதார வளத்தில் எந்த குறையும் இருக்காது. சமூகத்தில் மதிப்பு சிறப்பாக இருக்கும். அரசு வகையில்
அனுகூலம் ஏற்படும்.
பெண்களால் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஆடம்பர வசதி பெருகும். கணவன், மனைவி இடையே அன்பு சிறக்கும்.அக்.20,21 நவ.15,16ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். நவ.1,2ல் அவர்களின் வகையில் கருத்துவேறுபாடு உருவாகலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அக்.25,26ல் எதிர்பாராமல் பணம் வரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.
செவ்வாயால் பயணத்தின் போது சற்று கவனம் தேவை. உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். தொழில், வியாபாரத்தில் அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வங்கி கடன் மூலம் தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.
பெண்களை பங்கு தாரராக கொண்ட நிறுவனம் வளர்ச்சி பெறும். கடந்த காலத்தில் தொழிலில் குறுக்கிட்ட தடைகள் மறையும். லாபம் படிப்படியாக அதிகரிக்கும். நவ.7,8,9-ல் எதிர்பாராமல் வருமானம் கிடைக்கும்.
பணியாளர்களுக்கு குருபலத்தால் புதிய பதவி கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு கோரிக்கை எளிதில் நிறைவேறும். சக பெண் ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். சம்பள உயர்வு பெறுவதில் தடையேதும் இருக்காது. அக்.18,19, நவ.14,15-ல் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். அக்.27க்கு பிறகு பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், அதற்குரிய பலன் கிடைக்காமல் போகாது. வேலை விஷயமாக சிலர் வெளியூர் செல்ல நேரிடலாம். நெருப்பு, மின்சாரம் தொடர்பான பணியாளர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.
கலைஞர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். புதிய ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும்.
நவ.2-க்கு பிறகு எதிரி தொல்லை ஏற்படலாம். சமூகநல சேவகர்கள், அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். நவ.3,4-ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள் தொடர்ந்து முன்னேற்ற நிலையில் காணப்படுவர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். அக்.27-க்கு பிறகு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. ஆசிரியர்களின் வழிகாட்டுதலை ஏற்பது நல்லது.
விவசாயிகள் உழைப்புக்கேற்ற வருமானத்தை பெறலாம். நெல்,சோளம், கேழ்வரகு, கொள்ளு போன்ற பயிர்களில் நல்ல வருவாய் கிடைக்கும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் மாத தொடக்கத்தில் அதை நிறைவேற்றிக் கொள்ளலாம். அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் மெத்தனம் வேண்டாம். பெண்களுக்கு கணவர், குடும்பத்தினரிடம் நன்மதிப்பு உண்டாகும். அண்டை வீட்டாருடன் இணக்கம் உண்டாகும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். நவ.2- க்கு பிறகு எதிர்பார்ப்பு நிறைவேறும். சுயதொழில் புரியும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். நவ.7,8,9-ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள்.
சகோதரர் வழியில் பண உதவி கிடைக்கும். அக்.30,31-ல் ஆடை, அணிகலன் வாங்க யோகமுண்டு. பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம்.
* நல்ல நாள்: அக்.18, 19, 20, 21, 25, 26, 30, 31, நவ.5, 6, 7, 8, 9, 14, 15, 16
* கவன நாள்: நவம்பர் 10,11- சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,9
* நிறம்: மஞ்சள், பச்சை
* பரிகாரம்:
● வெள்ளியன்று சுக்கிரனுக்கு நெய் தீபம்
● பவுர்ணமியன்று அம்மன் கோயில் வழிபாடு
● பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு அர்ச்சனை