பதிவு செய்த நாள்
16
அக்
2017
02:10
குடும்பத்தினர் மீது பாசம் மிக்க கும்ப ராசி அன்பர்களே!
அக்.27- வரை புதன் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் கவலை வேண்டாம். நவ.3-ல் சுக்கிரன் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். ராகுவாலும் நன்மை அதிகரிக்கும். குருவால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். மனதில் உற்சாகம் பிறக்கும். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் குறையின்றி பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக செயல்படுவர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர் கூட, இணக்கமுடன் செயல்படும் சூழ்நிலை உண்டாகும்.
குடும்பத்தில் மாதத் தொடக்கத்தில் புதனால் குழப்பம் உருவாகலாம். எதிலும் பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அக். 27-க்கு பிறகு கணவன்-, மனைவி இடையே அன்னியோன்ய சூழ்நிலை உருவாகும்.
பெண்களால் பொன், பொருள் சேரும். சுக்கிரனால் ஆடம்பர வசதிகள் பெருகும். அக்.30,31-ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரிகளால் நன்மைகள் அதிகரிக்கும். அக்.25,26-ல் உறவினர் வருகையும், நன்மையும் கிடைக்கும்.
நவ.5,6-ல் அவர்களின் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபம் தரும். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள், அவர்கள் பிடியில் இருந்து அக்.27க்கு பிறகு விடுபடுவர். அக்.27,28,29, நவ.1,2-ல் சந்திரனால் தடைகள் வரலாம். நவ.10,11ல் எதிர்பாராமல் வருமானம் கிடைக்கும்.
எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். பணியாளர்களுக்கு திறமைக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். அக். 27- வரை வேலைப்பளு அதிகரித்தாலும் அதற்குரிய வருமானம் கிடைக்கும். அதன் பிறகு பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். அதிகாரிகளின் கருணை பார்வை கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் காணலாம். கோரிக்கைகள் எளிதில் நிறைவேறும். அக்.22,23,24- ஆகிய நாட்களில் நன்மையை எதிர்பார்க்கலாம்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். புகழ், பாராட்டுக்கு தடையேதும் இருக்காது. அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த பலன் பெற முடியாது. பிரதிபலன் கருதாமல் உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.
மாணவர்கள் குருவால் முன்னேற்றம் அடைவர். நட்பு விஷயத்தில் கவனம் தேவை. அக்.27- க்கு பிறகு பிரச்னை மறையும். போட்டி, பந்தயங்களில் பங்கேற்று வெற்றி காண்பர். ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும்.
விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ப வருமானம் காணலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். வழக்கு, விவகாரத்தில் மெத்தனம் வேண்டாம்.
பெண்களுக்கு கணவர், குடும்பத்தினரின் அன்பு கிடைக்கும். குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வீர்கள். அக்கம்பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். அக்.27- வரை பொறுமை தேவைப்படும். குரு சாதகமாக இருப்பதால் பிற்போக்கான நிலை உண்டாகாது. வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.
-
* நல்ல நாள்: அக்.22, 23, 24, 25, 26, 30, 31, நவ.3, 4, 10, 11, 12, 13
* கவன நாள்: அக்.18,19, நவ.14,15- சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 5,8
* நிறம்: மஞ்சள், வெள்ளை
* பரிகாரம்:
● சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை
● செவ்வாயன்று முருகனுக்கு பாலாபிேஷகம்
● ஞாயிறன்று ஏழைகளுக்கு கோதுமை தானம்