சபரிமலை: ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து கோயிலில் தீபம் ஏற்றினார். தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பக்தர்களுக்கு திருநீறு பிரசாதமாக வழங்கினார். சபரிமலையில் மேல்சாந்தி தேர்வு குலுக்கல் முறையில் நடைபெற்றது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு சபரிமலை நடைதிறந்ததும், வழக்கமான பூஜைகள் நடைபெற்றது . காலை 8:00 மணிக்கு புதிய மேல்சாந்தி குலுக்கல் தேர்வு நடந்தது. இதில் சபரிமலை மேல்சாந்தியாக உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி , மாளிகைபுரம் மேல்சாந்தியாக அன்னீஸ் நம்பூதிரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். உன்னிகிருஷ்ணன் வரும் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கு சபரிமலையில் தங்கி பூஜை செய்வார். முன்னதாக நேற்று மாலை 5:00 மணிக்கு நடை திறந்து கோயிலில் தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பக்தர்களுக்கு திருநீறு பிரசாதமாக வழங்கினார். வேறு விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை.