Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புனித தெரசம்மாள் ஆலய தேர்த்திருவிழா ... அரங்கநாதர் கோவில் சிறப்பு உண்டியல்களில் ரூ.2.29 லட்சம் வசூல் அரங்கநாதர் கோவில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் கருவறைக்குள் டைல்ஸ் பதிக்க கூடாது: இந்து அறநிலையத்துறை ஆணையர் அறிவுரை
எழுத்தின் அளவு:
கோவில் கருவறைக்குள் டைல்ஸ் பதிக்க கூடாது: இந்து அறநிலையத்துறை ஆணையர் அறிவுரை

பதிவு செய்த நாள்

17 அக்
2017
11:10

கொடுமுடி: சிற்ப சாஸ்திரத்தின்படி, கோவில் கருவறைக்குள் மொசைக், டைல்ஸ் கற்களை ஒட்டக்கூடாது என, இந்து அறநிலையத்துறை ஆணையர் தெரிவித்தார். சிவாச்சாரியார் நல அறக்கட்டளை, ஆதிசைவ சிவாச்சார்ய நற்பணி மன்றம், மயிலாடுதுறை சிவபுரம் வேதசிவாகம பாடசாலை இணைந்து, கொடுமுடி அருகே, ஒத்தக்கடையில், சிவாச்சார்யார்களுக்கு, புத்தொளிப்பயிற்சி முகாம் நடத்தியது. இதன் நிறைவு விழாவில், சென்னை, இந்து சமய அறநிலையத்துறை (திருப்பணி) கூடுதல் ஆணையர் கவிதா பங்கேற்றார். சிவாச்சாரியார்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி, அவர் பேசியதாவது: ஆகம விதிகளைக் கற்று, சிவாச்சாரியார்கள் நன்கு புலமைப்பட வேண்டும். கோவில்களில் திருப்பணி மேற்கொள்ளும் முன்பாக செய்யப்படும் பாலாலயத்தின் போது, கோவில் திருப்பணி எத்தனை ஆண்டுகளில் நிறைவடைய வேண்டும் என்பதை, ஆகம விதிகளின்படி பிறருக்கு எடுத்துரைக்க வேண்டும், கோவில்களில் நடப்படும் கொடி மரத்தை நேர்த்தியாக தேர்ந்தெடுக்க வேண்டும். எத்தனை ஆண்டுகளில் புதிய கொடி மரம் நிறுவ வேண்டும் என்பன உள்ளிட்ட தகவல்களை, சிவாச்சாரியார்கள் ஆகம விதிகளின் படி எடுத்துரைக்க வேண்டும். கடமை என்னவென்பதை புரிந்து, சிவாச்சாரியார்கள் செயல்படுவது அவசியம். சிற்ப சாஸ்திரத்தின்படி, கோவில் திருப்பணி மேற்கொள்ள வேண்டும். சிற்ப சாஸ்திரத்தின் படி கருவறைக்குள் மொசைக், டைல்ஸ் கற்களை ஒட்டக்கூடாது. இதை சிவாச்சாரியர்கள் விளக்கமாக எடுத்துரைத்தல் வேண்டும்.கும்பாபிஷேக தேதியை மட்டும், குறித்துக் கொடுப்பதை விடுத்து, தொடங்கும்போதே அதற்குரிய பலன் உள்ளவாறு, பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் சேகர் சிவாச்சாரியார், இரத்தின சபாபதி சிவாச்சாரியார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar