அன்னதானம் புரிய செல்வம் வேண்டும் செல்வத்தைத் தருபவள் லட்சுமியாகிய திருமகள். செல்வத்தின் காவலன் குபேரன், இவர்கள் இருவரையும் வழிபடுவதும் தீபாவளி நாளில்தான். வடநாட்டில்தான் இந்த லட்சுமி குபேர பூஜை சிறப்பாக நடைபெறுகிறது! அன்று வியாபாரிகள் புதுக்கணக்கு எழுதுவார்கள். தமிழ்நாட்டில் நரக சதுர்த்தி ஸ்நானமும், கேதார கவுரி விரதமும் முக்கியம் பெறுகின்றன!