வறியோர்க்குச் செய்வது மட்டுமல்ல அன்னதானம், அது ஈகை என்பது, பையிலும், கையிலும் நிறைய பணம் இருந்தாலும் பசி வேளைக்கு உணவு கிடைக்காமல் வெறுப்பும் ஏற்படலாம். எனவே பசித்தோர் எவராயினும் அவருக்கு அன்ன தானம் செய்வது புண்ணியமே. வாய் வாழ்த்தாவிடினும் வயிறு வாழ்த்தும் என்பார்கள்.
“ஐயமும், பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி உய்யுமாறு” சொல்கிறாள். ஆண்டாள்.
தீபாவளியன்று ஒரே நாளில் பஞ்சாரண்ய ஸ்தலங்களான திருக் கருகாவூர் (காலை 5.00 மணி முதல் 6.00 மணிக்குள்) அவணிநல்லூர் (காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள்) அரித்வார மங்கலம் (பகல் 11 மணி முதல் நண்பகல் 12:30 மணிக்குள்), ஆலங்குடி (மாலை 5.00 மணி முதல் 6.00 மணிக்குள்) திருக்களம்பூர் (இரவு 7.30 மணி முதல் இரவு 8.30 மணிக்குள்) கோயிலுகளுக்குச் சென்று வழிபட வேண்டும். இவ்வாறு செய்தால் கைலாசத்தில் சிவபெருமானை தரிசித்த பலன் கிட்டும்.