மகாபாரத்தில் வனவாசமும், அஞ்ஞாத வாசமும் முடிந்து கவுரவர்களை வெற்றி கொண்டு அஸ்தினாபுரம் திரும்பியதை அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளிலும், கோயிலிலும் விளக்குகள் ஏற்றிக் கொண்டாடினர். ஹஸ்தினாபுரம் மக்கள் ஏற்றிய தீப ஒளி தீபாவளியாகக் கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது. மகாபாரத யுத்தத்தில் கண்ணனின் துணைகொண்டுப் பாண்டவர்கள் போரை வென்றதால் தீபாவளி நாளில் கிருஷ்ணாஷ்டகம் கூறி கண்ணனை வழிபடுவது சிறப்பு.