திரேதாயுகத்தில் ராமச்சந்திர மூர்த்தி இராவணனை வென்று வனவாசம் முடிந்து அயோத்திக்குத் திரும்பியதை மக்கள் நகர் முழுவதும் விளக்குகள் ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடினர். இந்த தீபங்களும் தீபாவளியாக வடஇந்தியாவின் சில பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் மக்கள் கோயிலுக்குச் சென்று ராமச்சந்திர மூர்த்தியின் சன்னிதியில் நின்று பிரார்த்தனை செய்தால், மனஉறுதி, வீரம், குடும்ப நலம் அதிகரிப்பதாக நம்புகின்றனர்.