வங்காளம், பீகார், அசாம் ஆகிய மாநிலங்களில் காளிக்கு சியாமா பூஜையை செய்து வணங்கி தீபம் ஏற்றி இரவு முழுவதும் கொண்டாடுகிறார்கள். காளியை வணங்குவதால் தங்கள் வாழ்வு செழிப்பாகும் என அவர்கள் நம்புகின்றனர். எனவே நாமும் காளியை வணங்கி அவள் அருளைப் பெறுவோம். மேலும் வங்காளத்தில் உள்ளவர்கள் காளியை வணங்குவதால் அனைத்து நலன்களும் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். நாமும் அருகில் உள்ள அம்மன் கோயிலிற்குச் சென்று காளியை வணங்கி மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் கூறி அவள் அருளைப் பெறலாம்.