கடவுள் இல்லை என்று வாதிடுகிறது ஒரு கூட்டம். விஞ்ஞானத்தின் பெயரால் ஓலமிடுகிறது ஒரு கூட்டம். இப்படி கடவுளை நிந்திப்பவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும். பைபிள் சொல்வதை கேளுங்கள். *ஒரு தேசம் எனக்கு விரோதமாய் துரோகம் பண்ணிக்கொண்டேயிருந்து, பாவம் செய்தால், நான் (பிதா) அதற்கு விரோதமாக என் கையை நீட்டி, அதில் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்து, அதில் பஞ்சத்தை அனுப்பி, மனுஷரையும் மிருகங்களையும் அதில் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன். * நீங்கள் கர்த்தரோடிருந்தால்,. அவர் உங்களோடு இருப்பார். நீங்கள் அவரைத் தேடினால் உங்களுக்கு வெளிப்படுவார். அவரை விட்டுவிட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார். * நீ என்னை விட்டு பின் வாங்கிப் போனாய். ஆகையால், என் (பிதா) கையை உனக்கு விரோதமாய் நீட்டி, உன்னை அழிப்பேன். நான் பொறுத்து பொறுத்து இளைத்து போனேன். * மனுஷன் மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாகக் கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன். (மனிதனையும் தன் உடலையும் நம்பி பயனில்லை. ஆண்டவரை மட்டும் நம்பு) * எங்கள் தேவனுடைய கரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார் மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறதென்றும், அவருடைய வல்லமையும் அவருடைய கோபமும் அவரை விட்டு விலகுகிறவர்கள் எல்லார் மேலும் இருக்கிறது. கடவுளை நிந்திப்பதால் தான், இயற்கை நம்மை வஞ்சிக்கிறது. உலகைப் படைத்து பல வசதிகளைக் கொடுத்த ஆண்டவருக்கு நன்றி சொல்லாமல், அவரையே நிந்திப்பதால் தான் இயற்கை சீற்றங்களுக்கு ஆளாக நேரிடுகிறது.