திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் அமாவாசை பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19அக் 2017 05:10
பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பண்ருட்டி திருவதிகை ஸ்ரீஹேமாம்புஜவல்லி தாயார் சமேத சரநாராயண பெருமாள் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் வஜ்ராங்கி சேவையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு நடந்து, திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.