பதிவு செய்த நாள்
20
அக்
2017
10:10
உடுமலை: அமாவாசையை ஒட்டி, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.நம் முன்னோர்கள் தொன்றுதொட்டு, முக்கிய விரதங்களையும், வழிபாடுகளை கடைபிடித்து, வாழ்ந்து காட்டி வருகின்றனர். ஜோதிட சாஸ்திரம் மற்றும் வான நட்சத்திர மண்டலத்தின் படி, சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்கள் சுழற்சி முறையில், ஒரே ராசியில் சேர்வதை அமாவாசை என்கிறோம். அன்றைய தினம் நம் முன்னோர்களுக்கு, கறுப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்வதால், அவர்களது ஆசி நமக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
புரட்டாசி மாதத்தில், விரதம், வழிபாடு, விழாக்கள் மற்றும் பண்டிகைகள் அதிகமாகும். நடப்பாண்டு, புரட்டாசி முடிந்து, ஐப்பசி மாதம் துவங்கிய நிலையில், நேற்று அமாவாசை நாளாகும். இதையடுத்து, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவில் உட்புறம் மற்றும் வெளிப்புறத்திலும் வெகுநேரம் வரிசையில் காத்திருந்து, சுவாமியை தரிசித்து சென்றனர். அதிகப்படியானோர் தங்களது சொந்த வாகனங்களில் வருகை புரிந்ததால், அவ்வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அதேபோல், அத்துமீறி அணையில் குளிப்பதை தடுக்க, பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டிருந்தும், ஒரு சிலர் அத்துமீறி அணைக்குள் இறங்கி குளித்தனர்.