பதிவு செய்த நாள்
20
அக்
2017
11:10
ராமேஸ்வரம்:உலக அமைதிக்காக மகாராஷ்டிராவில் இருந்து புறப்பட்ட சிவன் சுவாமி சிலை யாத்திரை வாகனம் 2 ஆயிரம் கி.மீ., கடந்து ராமேஸ்வரம் வந்தது.உலக அமைதி, அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழவும், இந்திய நாடு பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டி மகாராஷ்டிரா மாநில புனே நகரில் இருந்து திறந்த வெளி சரக்கு லாரியில் 10 அடி உயர சிவன் சுவாமி சிலை, நந்தி சிலை மின் அலங்காரத்துடன் அமைத்து, கடந்த செப்.15ல் புனித யாத்திரை பயணம் துவங்கியது. இந்த யாத்திரை வாகனத்தில் 20க்கு மேலான பக்தர்கள் குழுவினர் உள்ளனர்.இந்த யாத்திரை பயணம் ஒடிசா, ஆந்திரா, கர்நாடகா வழியாக தமிழகம் வந்து 2 ஆயிரம் கி.மீ.,துாரம் கடந்து நேற்று ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தது.பக்தர்கள் குழு, மக்களிடம் மத ஒற்றுமை விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த யாத்திரை வாகனம் இன்று(அக்.20) ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு கன்னியாகுமரி, கேரளா, கோவா, குஜராத் வழியாக மீண்டும் புனேவுக்கு செல்ல உள்ளது என யாத்திரை குழுவினர் தெரிவித்தனர்.