மதுரை: நல்ல மழை, அமைதி நிலவவேண்டி மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயிலில் இன்று (அக்.,20) முதல் நவம்பர் 2 ம் தேதி வரை மாலை 6:30 மணிக்கு வால்மீகி ராமாயண உபன்யாசம் நடைபெறுகிறது. அழகர்கோவில் கோமட ஆச்சார்யர் கோமடம் சுவாமி, பராசர பட்டர் சுவாமிகள் சொற்பொழிவு நிகழ்த்துகின்றனர். இதில் பக்தர்கள் பங்கேற்று அருளாசி பெறலாம்.