விழுப்புரம் மாவட்டம், கீழ்ப்பெரும்பாக்கத்தில் உள்ள அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் தனிச்சன்னிதி கொண்டிருக்கும் வெற்றிமுருகன், தம் திருக்கரத்தில் வஜ்ராயுதத்தை ஏந்தியபடி தாமரை மலர்மீது அமர்ந்துள்ளார். ஆகவே, சக்தியின் அம்சமும் கலைவாணியின் அம்சமும்கொண்ட இந்த முருகப்பெருமானை வழிபடுவதால் வீரத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.