பதிவு செய்த நாள்
21
அக்
2017
11:10
பெசன்ட் நகர் : சென்னை, ஆறுபடை வீடு முருகன் கோவிலில், கந்த சஷ்டி திருவிழா, நேற்று துவங்கியது. பெசன்ட் நகரில் அமைந்துள்ள, ஆறுபடை வீடு முருகன் கோவில்களில், நேற்று முதல், கந்த சஷ்டி விழா துவங்கி உள்ளது. இதையொட்டி, 25ம் தேதி வரை, விழாக்கள் நடக்க உள்ளன. தினசரி காலை, 8:௦௦ மணிக்கு, விசேஷ அபிஷேகம், அலங்காரம் நடைபெற உள்ளது. நாளை முதல், ஞாயிற்றுக்கிழமை வரை, காலை, 10:30 மணிக்கு ஷண்முகார்ச்சனை; இரவு, 7:30 மணிக்கு, சுவாமி திருக்கோவில் உலா நிகழ உள்ளது. வரும், 23 மற்றும் 24ம் தேதிகளில், காலை, 9:௦௦ மணிக்கு, லட்சார்ச்சனை நடக்கும். ௨௫ம் தேதி காலை, 9:௦௦ மணிக்கு, வேல் மாறல் பாராயணம் நிகழும். மாலை, 4:30 மணிக்கு, சூரசம்ஹார விழா நடைபெறும். இரவு, ௭:௩௦ மணிக்கு, முருகப் பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா நடக்கும்.வரும், 26ம் தேதி, மாலை, 6:௦௦ மணிக்கு, தேவசேனை திருக்கல்யாண வைபவங்களுடன், விழா நிறைவு பெறும். திருக்கல்யாணத்திற்கு சங்கல்பம், விசேஷ திருமண பிரார்த்தனை, திருக்கல்யாண சீர்வரிசைகள் வரவேற்கப்படுகின்றன. அபிஷேகம், ஷண்முகார்ச்சனை, லட்சார்ச்சனை, திருக்கல்யாண வைபவங்களில் பங்கேற்க விரும்புவோர், கோவில் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.