பதிவு செய்த நாள்
23
அக்
2017
10:10
திருப்பதி: திருமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்துள்ளதால், ஏழுமலையான் தரிசனத்திற்காக, பக்தர்கள், 20 மணிநேரம் காத்திருந்தனர். புரட்டாசி மாதம் முடிந்துவிட்ட நிலையிலும், நேற்று முன்தினம், ஐந்தாவது சனிக்கிழமை காரணமாக, ஏழுமலையானை தரிசிக்க, திருமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்திருந்தது. இதனால், வாடகை அறை, லட்டு பிரசாதம், ஏழுமலையான் தரிசனம் என அனைத்திற்கும், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வைகுண்டம் காத்திருப்பு அறைகள் நிறைந்து, ௧ கி.மீ., துாரம் வரை, தரிசன வரிசை நீண்டது. பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கும், 20 ஆயிரம் டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுவதால், அதற்கு மேல் வரும் பக்தர்கள், தர்ம தரிசனத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அதனால், தர்ம தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க, 20 மணிநேரம் பக்தர்கள் காத்திருந்தனர்.