* நம் நிலை எவ்வளவு உயர்ந்தாலும் மனமும், உடம்பும் அறிவுக்கு பணிந்து வாழ வேண்டும். இல்லாவிட்டால் அவற்றுக்கு கேடு உண்டாகும். * உண்மையைப் பேசு. நல்லதைச் செய். தெய்வத்தை நம்பு. வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெற்று சிறப்புடன் வாழ்வாய். * உலகம் கடவுளின் விளையாட்டுமைதானம். இங்கு அவன் நடத்தும் செயல்கள் பற்றி புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமானது. * தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்திடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண் உடையவன். * நேர்மை தவறாமல் வாழ்வதோடு, பிறருக்கு உதவி செய்ய விரும்புபவரே மேலானவர். * ஊர் மக்களின் ஒற்றுமை, கோயிலால் நிறைவேறுகிறது. வீட்டில் வழிபாடு செய்வதால் குடும்ப ஒற்றுமை பாதுகாக்கப்படுகிறது. * மனத்தளர்ச்சிக்கு சிறிதும் இடம் தரக் கூடாது. மனம் உற்சாகத்துடன் இருந்தால் உடம்பில் சுறுசுறுப்பும், ஆற்றலும் பெருகும். *சிறு வயதில் ஏற்படும் எண்ணங்கள் மிகவும் வலிமை மிக்கவை. அவற்றை எளிதில் யாராலும் அசைத்து விட முடியாது. * அநியாயத்தை அநியாயத்தால் எதிர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அநியாயத்தை நியாயத்தாலும், அதர்மத்தை தர்மத்தாலும் வெற்றி கொள்ள வேண்டும். *அச்சம் இருக்கும் வரை மனிதன் அறிவாளியாக முடியாது. சொல்கிறார் தேசியக்கவி