பதிவு செய்த நாள்
24
அக்
2017
10:10
திருத்தணி : நாக சதுர்த்தி விழாவையொட்டி, திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், பாம்பு புற்றிக்கு பால், முட்டை ஊற்றி, பெண்கள் வழிபட்டனர்.
தீபாவளி முடிந்து, ஐந்தாம் நாளில், நாக சதுர்த்தி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், நேற்று, நாக சதுர்த்தி விழாவையொட்டி, திருத்தணி, அக்கைய்யா நாயுடு சாலை, தணிகாசலம்மன், காந்தி நகர் நல்லதண்ணீர் குளக்கரை நாகாலம்மன், முருகப்ப நகர் நாகாத்தம்மன் உட்பட அம்மன் கோவில்களில், திரளான பெண்கள், கோவில் வளாகத்தில் உள்ள புற்றில் முட்டை, பால் ஊற்றி, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதே போல், திருத்தணி அடுத்த, ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள தேசம்மன் கோவில், மாம்பாக்கசத்திரம் முக்கோட்டி அம்மன் உட்பட திருத்தணி தாலுகாவில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும், நாக சதுர்த்தி விழாவையொட்டி பெண்கள் சிறப்பு பூஜைகள் நடத்தியும், புற்றில் பால், முட்டை ஊற்றி வழிபட்டனர். காலை, 7:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, அம்மன் கோவில்களில், திரளான பெண்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.