பதிவு செய்த நாள்
30
அக்
2017
12:10
அனுப்பர்பாளையம் : திருப்பூர் அருகே வாவிபாளையத்தில் காமாட்சியம்மன், கருப்பண சுவாமி கோவில் கும்பாபிஷேகம். இன்று காலை 9:00 மணிக்கு மேல் 10:20 மணிக்குள் நடக்கிறது. இதற்காக, நேற்று மாலை அப்பகுதியில் உள்ள ஆதி விநாயகர் கோவிலில் இருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், முளைப்பாலிகை எடுத்து, மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அதன்பின், திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு, பிள்ளையார் வழிபாடு, விமான கலசம் நிறுவுதல், யாகசாலை சுற்று தெய்வ வழிபாடு, உள்ளிட்ட சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன. இன்று, காலை, 8:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையை தொடர்ந்து, 10:10 மணிக்கு காமாட்சியம்மன், கருப்பணசாமி மூலவர் மற்றும் விமான கோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவையொட்டி, காலை, 9:00 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.