பதிவு செய்த நாள்
01
நவ
2017
10:11
பழநி: பழநி முருகன் கோவிலில், 1.62 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய முடி காணிக்கை மண்டபம் கட்டப்பட்டு உள்ளது. பழநி முருகன் கோவிலில் தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகின்றனர். ரூ.30 கட்டணம் : தற்போது, சரவணப்பொய்கை, சண்முக நதி, பாத விநாயகர் கோவில், வின்ச் ஸ்டேஷன், தங்கும் விடுதி உள்ளிட்ட இடங்களில், முடி காணிக்கை நிலையங்கள் செயல்படுகின்றன.இங்கு கட்டணமாக, 30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சரவணப் பொய்கை, வடக்கு கிரி வீதி, வின்ச் ஸ்டேஷன் போன்ற இடங்களில் தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக் காலங்களில் முடி காணிக்கைக்கு கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.
ரூ.1.62 கோடி : இதை தவிர்ப்பதற்காக தண்டபாணி நிலைய வளாகத்தில்,1.62 கோடி ரூபாய் செலவில், நவீன குளியல் அறைகள், டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்ட தரைத்தளத்துடன், ஒருங்கிணைந்த முடி காணிக்கை நிலையம் கட்டப்பட்டுள்ளது. இது தைப் பூசத்திற்குள், பக்தர்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.