திட்டக்குடி திரவுபதையம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02நவ 2017 05:11
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த ஈ.கீரனூர் கிராமத்தில் திரவுபதையம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. ஈ.கீரனூர் திரவுபதையம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 1ம் தேதி மதியம் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜைகளுடன் துவங்கியது. யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இன்று அதிகாலை தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருப்புகழ் ஓதுதலோடு நிகழ்ச்சி துவங்கியது. காலை 6 மணிக்கு கோ பூஜை, கன்னிகாதரிசனம், நாடிசந்தானம், நான்காம் கால யாகபூஜை நடந்தது. காலை 8மணிக்கு யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு, விமானங்கள் மஹா சம்ப்ரோஷ்ணம் மற்றும் மூலவர் சம்ப்ரோஷ்ணத்துடன் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை நாராயண பட்டாச்சாரியார், முரளி கிருஷ்ண பட்டாச்சாரியார் நடத்தி வைத்தனர். விழாவில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.