மதுரையில் விளாச்சேரியில் மெகா சைஸ் கார்த்திகை அகல் விளக்குகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03நவ 2017 10:11
தென் திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீ வில்லிப்புத்தூர் திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை விளாச்சேரியில் மெகா சைஸ் அகல் விளக்குகள் தயா ராகின்றன.
இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் களிமண், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், காகிதகூழ், சிமென்ட் மூலம் சீசனுக்கு ஏற்ப பொம்மைகள், அகல் விளக்குகள் தயாரிக்கின்றனர். இவை தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் விற்பனைக்கு செல்கிறது. கார்த்திகை மாத த்தை முன்னிட்டு தற்போது ஒரு இன்ஞ் முதல் அகல் விளக்குகள் தயாரிக்கப் படுகின்றன.
திருவண்ணாமலை வெங்கடாஜலபதி கோயில் கார்த்திகை தீபத்திற்காக 2 அடி உயரம், 2 அடி அகலத்தில் 5 மெகா சைஸ் அகல் விளக்குகள் களிமண்ணில் தயாரிக்கப் பட்டுள்ளன. இதை தயாரித்த சாம்பசிவம் கூறியதாவது: பரம்பரையாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.
23 ஆண்டுகளாக இந்த விளக்குகளை தயாரித்து திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கிறோம். இவ்விளக்கு 30 லிட்டர் எண்ணெய் பிடிக்கும். மூன்று நாட்கள் தொடர்ந்து எரியும். இத்துடன் இரண்டு லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு அடி உயரத்தில் 25 விளக்கு களும், 100 மில்லி கொள்ளளவு கொண்ட இரண்டாயிரம் களி மண் விளக்குகளும் திருவண் ணாமலை தீபத்திற்காக தயாரிக்கிறோம், என்றார்.