பதிவு செய்த நாள்
10
நவ
2017
11:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கார்த்திகை தீபத்திருவிழாவின் போது, மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்காக, கொப்பரையை தயார் செய்யும் பணி துவங்கியுள்ளது. திருவண்ணாமலையில், கார்த்திகை தீபத்திருவிழா, டிச.,2ல் நடக்கிறது. இதையொட்டி, 2,668 அடி உயரமுள்ள மலையில், ராட்சத கொப்பரையில், அன்று மஹாதீபம் ஏற்றப்படும். இதற்காக, கடந்தாண்டு, 250 கிலோ செம்பு தகடுகளால் வேயப்பட்ட கொப்பரை தயார் செய்யப்பட்டு, அதில் மஹாதீபம் ஏற்றப்பட்டது. இந்தாண்டு தீபத்திருவிழாவுக்காக, தீபம் ஏற்றும் கொப்பரையை தயார் செய்யும் பணி, நேற்று காலை துவங்கியது. முன்னதாக கொப்பரைக்கு பூஜை போடப்பட்டது.