பதிவு செய்த நாள்
10
நவ
2017
11:11
ராசிபுரம்: ராசிபுரம், நித்ய சுமங்கலி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. ராசிபுரம், நித்யசுமங்கலி மாரியம்மன் கோவில் ஐப்பசி மாத தேர் திருவிழா, அக்., 24ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலை, அக்னி குண்டம் பிரவேசித்தல் நடந்தது. தொடர்ந்து, மாலை, 5:00 மணியளவில், திருத்தேர் உற்சவம் துவங்கியது. முன்னதாக, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, தேர்முட்டியில் நிறுத்தப்பட்டிருந்த தேரில் அம்மனை அமர்த்துகின்றனர். தொடர்ந்து, தேருக்கு பூஜை செய்தபின், மக்கள் ஒன்றுகூடி தேரை இழுத்தனர். கடைவீதியில் தேர் நிறுத்தப்பட்டது. இன்று, அண்ணாசாலை வழியாக, மீண்டும் திருத்தேர் தேர்முட்டியில் நிலைநிறுத்தப்படுகிறது.