பதிவு செய்த நாள்
10
நவ
2017
02:11
சிந்தனையில் தெளிவு கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!
சுக்கிரனின் நற்பலன்கள் மாதம் முழுவதும் தொடரும். விடாமுயற்சியால் வாழ்வில் முன்னேறுவீர்கள். டிச.2ல் செவ்வாய் சாதகமான இடத்திற்கு வருகிறார். புதன், கேது மாதம் முழுவதும் நற்பலனை வாரி வழங்குவர். பொருளாதார வளம் சிறக்கும். மனதில் அபார ஆற்றல் பிறக்கும். நகை, ஆபரணம் வாங்க யோகமுண்டாகும். சுக்கிரனின் பலத்தால் சமூகத்தில் மதிப்பு உயரும். மாத பிற் பகுதியில் செவ்வாயால் மனதில் பக்தி உயர்வு மேம்படும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.
கணவன், மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வாழ்வில் மகிழ்ச்சி மேலோங்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாத முற்பகுதியில் அனாவசிய செலவை குறைப்பது நல்லது. சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். டிச.1க்கு பிறகு குடும்பத்தோடு புனித தலங் களுக்கு சென்று வருவீர்கள். டிச.9,10ல் பெண்கள் உதவிகரமாக இருப்பர். விருந்து, விழா என சென்று வருவீர்கள். நவ.19,20ல் உறவினர்கள் வகையில் பிரச்னை உருவாகலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் டிச.5,6 ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும்.
சூரியனால் கண்நோய்கள் உருவாகலாம். மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். மாத முற்பகுதியில் செவ்வாயால் வீண் விரயம் ஏற்பட வாய்ப்புண்டு.
புதிய தொழில் முயற்சி, விரிவாக்கம் செய்வதை தவிர்க்கவும். பகைவரால் மறை முகப்போட்டியை சந்திக்க நேரிடலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு
காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைப்பது நல்லது. நவ.24,25ல் எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும். டிச. 7,8,11,12,13 ல் சந்திரனால் தடைகள் குறுக்கிடலாம். டிச.1 க்கு பிறகு கோயில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் வளர்ச்சி பெறும்.
பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து விடுபடுவர். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. எதிர்பார்த்த கோரிக்கைகள் ஓரளவு நிறைவேறும்.
அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அக்கறையுடன் இருக்கவும். புதன் சாதகமாக இருப்பதால் பின்தங்கிய நிலை உண்டாகாது. டிச. 1க்கு பிறகு போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். டிச.3,4ல் சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்க பெறுவர். ரசிகர்களின் மத்தியில் நற்பெயர் உண்டாகும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி, பொறுப்பு கிடைக்க யோகமுண்டு.
சமூகநல சேவகர்களின் எண்ணங்கள் ஈடேறும். மாணவர்கள் முன்னேற்ற பாதையில் செல்வர். ஆசிரியர்களின் அறிவுரை வளர்ச்சிக்கு துணை நிற்கும். புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகை சூடுவர்.
விவசாயிகள் சிறப்பான மகசூல் கிடைக்கப் பெறுவர். மஞ்சள், கேழ்வரகு, சோளம்
காய்கறி, பழ வகைகள் போன்றவை மூலம் நல்ல வருமானத்தை காணலாம். டிச.1க்கு பிறகு சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.
பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்பர். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் பெறுவர். குழந்தைகளால் பெருமை கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுய தொழில் புரியும் பெண்கள் நல்ல வளர்ச்சி காண்பர். நவ.26,27 ஆகிய நாட்களில் சிறப்பான பலன் காணலாம். விருந்து விழா என சென்று வருவீர்கள்.
* நல்ல நாள்: நவ.17,18,24,25,26,27, டிச. 3,4,5,6,9,10,14,15
* கவன நாள்: நவ.28,29,30 சந்திராஷ்டமம்.
* அதிர்ஷ்ட எண்:1,7 நிறம்: பச்சை, வெள்ளை
* பரிகாரம்:
* சனியன்று சனீஸ்வரருக்கு எண்ணெய் தீபம்
* ஞாயிறு ராகு காலத்தில் பைரவர் வழிபாடு
* பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு அர்ச்சனை