கோவை பொள்ளாச்சி சாலையில் 21 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தலம். இதுவொரு மலைக்கோயில். மலையுச்சியில் இரண்டு சுனைகள் உள்ளன. முதல் சுனையில் நீராடி கோயிலை வலம் வர வேண்டும். இரண்டாவது சுனையில் நீராடி சுவாமியை தரிசிக்க வேண்டும். என்பது ஐதீகம். கருவறையில் முருகப்பெருமான் வலக்கையில் வீரவேல் தாங்கி காட்சி தருகிறார். கருவறைக்கு எதிரிலுள்ள மயிலின் அருகிலிருந்து எதிர்ப்புறம் நோக்கினால் முருகப்பெருமானையும் வலப்பக்கம் நடராஜப் பெருமானையும், இடப்பக்கம் சோமாஸ்கந்த மூர்த்தியையும் தரிசிக்கலாம். கிணத்துக்கடவு என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு.