நெய்வேலிக்கு அருகே அமைந்துள்ள மிகப் பழமையான அற்புதமான கோயில். அருணகிரிநாதர் பிரார்த்தனைப்படி இத்திருத்தலத்தில் கந்தப்பெருமான் வள்ளி, தேவசேனா, சமேதராய் கையில் வில், அம்புடன் காட்சிதருகிறார். மூலவர் திருமேனி சிவலிங்க வடிவத்தைப் பெற்று விளங்குவதால், மூலவருக்கு சிவசுப்பிரமணியன் என்று திருநாமம் ஏற்பட்டுள்ளது. சுயம்புமூர்த்தியாக விளங்கும் முருகப் பெருமானின் பின்புற இடத்தோளில் வடு இருப்பதைக் காணலாம்.