சென்னைக்கு அருகேயுள்ள பொன்னேரியிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. திருக்கோயிலில் முருகப்பெருமான் இரு தேவியர் சமேதராய் தரிசனம் தருகிறார். வள்ளி, தெய்வானை இடம்மாறி எழுந்தருளியுள்ளனர். பெருமானின் இடப்பக்கம் வள்ளி தேவியார் குறமகளுக்குரிய கொண்டையும் அதனைச் சுற்றி மணிமாலைகளும் செவிகளில் பனையோலையால் செய்யப்பட்ட அணியாபரணமும் அணிந்துள்ளார். வலப்பக்கம் தெய்வானை தலையில் கிரீடமும். செவிகளில் மகர குண்டலங்களும் பூண்டுள்ளார். இங்குள்ள மூல விக்ரகங்கள் 1976ஆம் ஆண்டு பூமிக்குள்ளிலிருந்து கிடைத்தவையாகும்.