சிரத்தையுடன் செய்யப்படுவது சிரார்த்தமாகும். பிதுர்கள் இறந்த நாளில் அவர்களின் மேல்கதிக்காக சந்ததிகள் சிரத்தையுடன் செய்யும் கிரியையாகும் இறந்த நாளேயன்றி அமாவாசை, வருடப்பிறப்பு முதலிய நாட்களிலும், சிறந்த தீர்த்தம், கோயிலுள்ள இடங்களிலும் இது செய்யவேண்டும்.